நீலகிரி மாவட்டத்தில் இம்மாதம் 16ஆம் தேதி அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட திவ்யா தெரிவித்துள்ளதாவது:
நீலகிரி மாவட்டத்தில் இம்மாதம் 16ஆம் தேதி அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. உதகை வட்டத்தில் போர்த்திமந்து சமுதாயக் கூடத்திலும், குன்னூர் வட்டத்தில் உலிக்கல் சமுதாயக் கூடத்திலும், கோத்தகிரி வட்டத்தில் பங்களாபாடி சமுதாயக் கூடத்திலும், குந்தா வட்டத்தில் மைனலை சமுதாயக் கூடத்திலும், கூடலூர் வட்டத்தில் காந்தி நகர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளாகத்திலும், பந்தலூர் வட்டத்தில் நெலாக்கோட்டை அரசு ஆரம்பப் பள்ளி வளாகத்திலும்
அம்மா திட்ட முகாம்கள் நடைபெறும். இம்முகாம்களில் சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தவறாது பங்கேற்று தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.