நீலகிரி

மாவட்டத்தில் 16ஆம் தேதி  அம்மா திட்ட சிறப்பு முகாம்

DIN

நீலகிரி மாவட்டத்தில் இம்மாதம் 16ஆம் தேதி அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட திவ்யா தெரிவித்துள்ளதாவது:
  நீலகிரி மாவட்டத்தில் இம்மாதம் 16ஆம் தேதி அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. உதகை வட்டத்தில் போர்த்திமந்து சமுதாயக் கூடத்திலும், குன்னூர் வட்டத்தில் உலிக்கல் சமுதாயக் கூடத்திலும்,  கோத்தகிரி வட்டத்தில் பங்களாபாடி சமுதாயக் கூடத்திலும்,  குந்தா வட்டத்தில் மைனலை சமுதாயக் கூடத்திலும்,  கூடலூர் வட்டத்தில் காந்தி நகர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளாகத்திலும்,  பந்தலூர் வட்டத்தில் நெலாக்கோட்டை அரசு ஆரம்பப் பள்ளி வளாகத்திலும் 
அம்மா திட்ட முகாம்கள் நடைபெறும். இம்முகாம்களில் சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தவறாது பங்கேற்று தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT