நீலகிரி

நவீன நீலகிரியை உருவாக்கிய ஜான் சலீவனின் 165ஆவது நினைவு தினம் அனுசரிப்பு

DIN

நவீன நீலகிரி மாவட்டத்தை உருவாக்கிய  கோவை மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த ஜான் சலீவனின்  165ஆவது  நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. 
நவீன நீலகிரி மாவட்டம் உருவாக முக்கியக் காரணமாக இருந்தவர் ஜான் சலீவன். இவரின் 165ஆவது  நினைவு தினம்    கண்னேரிமுக்கு கிராமத்தில் நடைபெற்றது. 
இதில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, குன்னூர் சட்டப் பேரவை உறுப்பினர் சாந்திராமு ஆகியோர் கலந்து கொண்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
பின் ஏராளமான பொதுமக் கள், அரசு அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
அப்போது, ஜான் சலீவன் பூங்கா அமைக்க ரூ.88 லட்சம்  நிதி  ஒதுக்கப்பட்டு 6 மாத காலத்தில்  பணிகள் நிறைவு பெறும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில்  பழங்குடியின அமைப்பின் செயலாளர் ஆல்வாஸ் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ்-2 தோ்வு: நீலகிரியில் 94.27 சதவீதம் போ் தோ்ச்சி

நீலகிரிக்கு வருவதற்கு 21,446 போ் இ-பாஸ் பெற விண்ணப்பம்

எங்கே செல்லும் இந்தப் பாதை...?

ஈரோடு நகரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

பள்ளிச் செல்வத்துக்கு வந்த சோதனை!

SCROLL FOR NEXT