குன்னூர் அருகே உள்ள ஜெகதளா பேரூராட்சியில் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஜெகதளா கிராமத்தில் செயல் அலுவலர் மணிகண்டன் (பொறுப்பு) மேற்பார்வையில், இளநிலை உதவியாளர் ஜெகதீஷ், ஊழியர்கள் அங்குள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அதில், கடைகளில் பிளாஸ்டிக் அட்டை, கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பல கடைகளில் சோதனை நடத்தப்பட்டு, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் அவற்றை பயன்படுத்தியவர்களுக்கு ரூ. 3,500 அபராதம் விதிக்கப்பட்டது.