நீலகிரி

யானை தாக்கியதில் காயமடைந்த முதியவர் பலி

DIN

முதுமலை- நம்பிக்குன்னு பகுதியில் கடந்த 11ஆம் தேதி யானை தாக்கியதில் காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள முதுமலை ஊராட்சி, நம்பிக்குன்னு பகுதியில் வசித்த சுப்பன் செட்டி கடந்த 11ஆம் தேதி  யானை தாக்கியதில் காயமடைந்தார். அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்று முதலுதவிக்குப் பிறகு கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் புதன்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து வனத் துறையினர் விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT