முதுமலை- நம்பிக்குன்னு பகுதியில் கடந்த 11ஆம் தேதி யானை தாக்கியதில் காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள முதுமலை ஊராட்சி, நம்பிக்குன்னு பகுதியில் வசித்த சுப்பன் செட்டி கடந்த 11ஆம் தேதி யானை தாக்கியதில் காயமடைந்தார். அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்று முதலுதவிக்குப் பிறகு கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் புதன்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து வனத் துறையினர் விசாரிக்கின்றனர்.