நீலகிரி

வீட்டின் மீது கவிழ்ந்த ஜீப்: முதியவர் காயம்

DIN

கூடலூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஜீப் வீட்டின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முதியவர் திங்கள்கிழமை காயமடைந்தார்.
கூடலூர் அடுத்துள்ள கோழிப்பாலம் கல்லூரி அருகே உள்ள வளைவானப் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தாழ்வான பகுதியிலிருந்த வீட்டின் மீது ஜீப் கவிழ்ந்தது.
இதில் வீட்டின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. மேலும் வீட்டிலிருந்த மொய்தீன் குட்டி (80) காயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்தில் ஜீப்பை ஓட்டி வந்த மணிகண்டன் என்பவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT