நீலகிரி

புளியம்வயல் கிராமத்துக்குச் செல்லும் தொங்கும் பாலத்தை சீரமைக்கக் கோரிக்கை

DIN

கூடலூரை அடுத்துள்ள புளியம்வயல் கிராமத்துக்குச் செல்லும் சாலையில் உள்ள தொங்கும் பாலத்தை சீரமைத்து நிரந்தர பாலம் அமைத்துத் தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   
 தேவர்சோலை பேரூராட்சியில் உள்ள புளியம்வயல் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்கள் தங்கள் கிராத்துக்குச் செல்லும் வழியில் பாண்டியாறு ஆற்றின் குறுக்கே மரத்தால் ஆனதொங்கும் பாலத்தை அமைத்து அதில் சென்றுவருகின்றனர். 
இப்பகுதியில் அவசரத் தேவைக்கு வாகனங்களை இயக்க முடியாத நிலை உள்ளது. எனவே, தொங்கும் பாலத்தை அகற்றிவிட்டு நிரந்தரமாக வாகனங்களும் செல்லும் வகையில் பாலம் அமைத்துத் தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

SCROLL FOR NEXT