நீலகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் 6 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.22,000 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 4 ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கிய 4 மண்டலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு தொடர்பாக புதன்கிழமை ஒட்டுமொத்த கள ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வின்போது தடை செய்யப்பட்ட 186 குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள், சுமார் 6 கிலோ எடையிலான பிளாஸ்டிக் பொருள்கள் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இதற்காக அவர்களிடமிருந்து ரூ.22.000 அபராதம் வசூலிக்கப்பட்டது.