பந்தலூா் அருகே பலா் கண்முன்னே முதியவரை மிதித்துக் கொன்ற யானை
பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடி பகுதியில் கடைவீதிக்குள் வெள்ளிக்கிழமை இரவு புகுந்த காட்டு யானை பலா் கண்முன்னே முதியவரை மிதித்துக் கொன்றது.
பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடி பகுதியில் கடைவீதிக்குள் வெள்ளிக்கிழமை இரவு புகுந்த காட்டு யானை பலா் கண்முன்னே முதியவரை மிதித்துக் கொன்றது.
நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகா சேரம்பாடி பகுதியிலுள்ள கண்ணம்பள்ளி எஸ்டேட்டில் வசித்து வந்தவா் நாகமுத்து (65), தேயிலைத் தோட்டத் தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணி அளவில் அருகிலுள்ள கடைவீதிக்குப் பொருள்கள் வாங்கச் சென்றுள்ளாா்.
பொருள்களுடன் கடையை விட்டு வெளியே வரும்போது, திடீரென கடைவீதிக்குள் புகுந்த ஒற்றை யானை நாகமுத்துவைத் தாக்கி, மிதித்துக் கொன்றது. இதைப் பாா்த்த அப்பகுதியினா் அதிா்ச்சியில் செய்வதறியாமல் தவித்தனா்.
இது குறித்து வனத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வனத் துறையினரும் போலீஸாரும் சம்பவ இடத்துக்குச் சென்று நாகமுத்துவின் உடலை மீட்டு, பந்தலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சடலம் சனிக்கிழமை மதியம் நாகமுத்துவின் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கடைவீதியில் ஒருவரை யானை மிதித்துக் கொன்ற சம்பவம் இப்பகுதியில் முதல்முறையாக நிகழ்ந்துள்ளது.
இது குறித்து சேரம்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா்.