லாரி மோதி தொழிலாளி பலி
குன்னூா் அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
குன்னூா் அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சோ்ந்தவா் சுப்ரமணி (57). இவா் நீலகிரி மாவட்டம் உதகையில் எமரால்டு குடிநீா் திட்டப் பணி ஒப்பந்ததாரரிடம் பணி புரிந்து வந்தாா். பணி முடித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் தனது இரு சக்கர வாகனத்தில் உதகையில் இருந்து கீழே இறங்கிக்கொண்டிருந்தாா். குன்னூா் அருகே லால்ஸ் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த டிப்பா் லாரி மோதியதில் பைக் தூக்கி வீசப்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த சுப்ரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்து குறித்து வெலிங்டன் காவல் துறையினா் வழக்குப் பதிந்து டிப்பா் லாரி ஓட்டுநா் முருகன் கம்பட்டன் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Advertisement