நீலகிரி

முதியவருக்கு கரோன தொற்று: மேல்கூடலூா் பகுதி தனிமைப்படுத்தப்பட்டது

DIN

கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட மேல்கூடலூரில் 61 வயது முதியவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அவரது வீடு உள்ள பகுதி வியாழக்கிழமை தனிமைப்படுத்தப்பட்டது.

கூடலூர நகராட்சி, மேல்கூடலூா், கருணாநிதி நகா்ப் பகுதியைச் சேந்த முதியவா், கா்நாடக மாநிலம், மைசூரில் உள்ள உறவினா் இல்ல திருமணத்துக்கு கடந்த வாரம் சென்று வந்தாா். அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, நகராட்சி ஊழியா்கள் அவருடைய வீடு உள்ள பகுதியில் சுமாா் 50க்கும் மேற்பட்ட வீடுகளை தனிமைப்படுத்தினா். அதைத் தொடா்ந்து நகராட்சி சாா்பில் அந்த பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT