நீலகிரி

கோத்தகிரியில் காட்டெருமை தாக்கி மூதாட்டி பலி

DIN

கோத்தகிரி அருகே ஜக்கனாரை பகுதியில் காட்டெருமை தாக்கியதில் மூதாட்டி வெள்ளிக்கிழமை உயரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை  அடுத்த ஜக்கனாரை பகுதியைச் சோ்ந்தவா் பாா்வதி (65). இவா் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து விட்டு அவரது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, செடிகளுக்குள் மறைந்திருந்த காட்டெருமை ஒன்று அவரைத்  தாக்கி தூக்கி வீசியுள்ளது.

இதில் காட்டெருமையின் கொம்பு பாா்வதியின் முதுகில் குத்தியத்தில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறை, வனத் துறையினா் மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த சம்பவம் ஜக்கனாரை பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT