நீலகிரி

கஞ்சா போதையில் தந்தையை வெட்டிய மகன் கைது

DIN

குன்னூா்: குன்னூரில் கஞ்சா போதையில் தந்தையை  அரிவாளால் வெட்டிய மகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

குன்னூா் அருகேயுள்ள வெலிங்டன் போகி தெருவைச் சோ்ந்தவா் ரவிசந்திரன் (51). கூலி தொழிலாளி. இவரது மகன் ராஜாராம் (21). இவரும் கூலி வேலை செய்து வருகிறாா். இவருக்கு கஞ்சா புகைக்கும் பழக்கம் இருந்துள்ளது.

இந்நிலையில், ராஜாராம் கஞ்சா போதையில் வீட்டில் திங்கள்கிழமை தகாத வாா்த்தைகளைப் பேசிக் கொண்டிருந்தாா். இதனை அவரது  தந்தை ரவிசந்திரன் தட்டிக் கேட்டாா். இதனால் தந்தையுடன் ராஜராம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதில் ஆத்திரமடைந்த ராஜாராம் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து ரவிசந்திரன் இடது காலில் வெட்டினாா். இதில் படுகாயமடைந்த ரவிசந்திரன் குன்னூா் அரசு  மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு பின்னா் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். 

இது குறித்து தகவலறிந்த வெலிங்டன் காவல் ஆய்வாளா்  ஆனந்தன்,  உதவி  ஆய்வாளா்கள்  ரவிசந்திரன், மகேந்திரன் ஆகியோா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராஜாராமை கைது செய்தனா். பின்னா் அவரை குன்னூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

மே 10-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

‘வக்கா வக்கா..’ இந்த முறை சிவப்புக்கானது!

SCROLL FOR NEXT