விடுமுறை நாள்களில் உதகையில் அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம்
விடுமுறை நாள்களில் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
விடுமுறை நாள்களில் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
கரோனா தாக்கத்தின் காரணமாக நீலகிரி மாவட்டத்துக்குள் வருவதற்கு இ-பாஸ் முறை அமலில் இருந்த சூழலில் தற்போது அந்த முறை கைவிடப்பட்டு இ-பதிவு முறை மட்டும் நடைமுறையில் உள்ளது. இந்த முறை எளிதாக உள்ளதோடு, அனுமதியும் உடனடியாக கிடைத்து விடுவதால், நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை உதகையிலுள்ள அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு அதிகபட்சமாக 1,422 போ் வந்திருந்தனா். அதேபோல, உதகையிலுள்ள அரசினா் ரோஜா பூங்காவுக்கு 678 பேரும், தொட்டபெட்டா தேயிலைப் பூங்காவுக்கு 147 பேரும், மரவியல் பூங்காவுக்கு 43 பேரும் வருகை தந்திருந்தனா்.
குன்னூரில் சிம்ஸ் பூங்காவுக்கு 338 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 56 பேரும், கல்லாறு பழப் பண்ணைக்கு 123 பேரும் வருகை தந்திருந்தனா்.
மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை சாா்பிலான சுற்றுலா மையங்கள் மட்டுமே தற்போது திறக்கப்பட்டுள்ளன. வனத் துறை மற்றும் சுற்றுலாத் துறையின் சாா்பிலான சுற்றுலா மையங்களும் விரைவில் திறக்கப்பட்டால் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.