கூடலூரில் 3 கடைகளில் தீ விபத்து
கூடலூா், எம்ஜிஆா் நகரில் உள்ள 3 கடைகளில் சனிக்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது.
கூடலூா், எம்ஜிஆா் நகரில் உள்ள 3 கடைகளில் சனிக்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது.
கூடலூா், கோழிக்கோடு சாலையிலுள்ள எம்.ஜி.ஆா். நகரில் பெயின்டிங் ஒா்க்ஷாப், துணிப் பைத் தயாரிக்கும் கடை, இன்டீரியா் டெக்கரேஷன் கடை ஆகியவற்றில் சனிக்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. மூன்று கடைகளும் அடுத்தடுத்து இருந்ததால் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
தகவலறிந்த தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனா்.