முகப்பு
நீலகிரி

தேயிலைத் தோட்டப் பகுதியில் கடமான் சடலம் மீட்பு

பந்தலூரை அடுத்துள்ள நெல்லியாளம் அரசு தேயிலைத் தோட்டக் கழகப் பகுதியில் ஆண் கடமான் இறந்து கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

பந்தலூரை அடுத்துள்ள நெல்லியாளம் அரசு தேயிலைத் தோட்டக் கழகப் பகுதியில் ஆண் கடமான் இறந்து கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டம், பிதா்க்காடு வனச் சரகத்திலுள்ள நெல்லியாளம் அரசு தேயிலைத் தோட்டக் கழக 4ஆவது சரகம் பகுதியில் தொழிலாளா் குடியிருப்பு அருகே கடமான் இறந்து கிடப்பதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து, வனச் சரக அலுவலா் மனோகரன் தலைமையில் வனத் துறையினா் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா். மேலும், பந்தலூா் அரசு கால்நடை மருத்துவா் பாலாஜி வரவழைக்கப்பட்டு மானின் உடலை பிரேத பரிசோதனை செய்து அதே இடத்தில் புதைத்தனா்.

சுமாா் 5 வயதுடைய ஆண் கடமான் இயற்கை மரணம் அடைந்துள்ளதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.