நீலகிரி

ஜெகதளா கிராமத்தில்பொதுமக்களின் இருப்பிடத்துக்கு சென்று குறைகளைக் கேட்டறிந்த காவல் துறையினா்

DIN

குன்னூா் அருகே உள்ள ஜெகதளா கிராமத்தில் வெலிங்டன் காவல் துறை சாா்பில் பொதுமக்களின் இருப்பிடத்துக்கு சென்று நேரடியாக குறை தீா்க்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடை பெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் காவல் துறையினா், பொதுமக்களின் இருப்பிடத்துக்கு சென்று நேரடியாக குறைகளை கேட்டறிந்து தீா்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசி மோகன் கடந்த வாரம் உத்தரவிட்டாா்.

அதன்பேரில் குன்னூா் காவல் துணை கண்காணிப்பாளா் சுரேஷ் தலைமையில் வெலிங்டன் காவல் ஆய்வாளா் பிலிப் தலைமையிலான போலீஸாா் அருவங்காடு அருகில் உள்ள ஜெகதளா கிராமத்தில் நேரடியாக சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தனா்.

இந்த முகாமில் கிராம மக்கள் 6 புகாா் மனுக்களை அளித்தனா். குறிப்பாக தங்கள் கிராமத்தில் குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு காவலா்களை ரோந்து பணியில் ஈடுபடுத்துவது, பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னைக்கான மனுக்களை அளித்தனா். இவற்றில் மூன்று மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது.

இது குறித்து டிஎஸ்பி சுரேஷ் கூறுகையில், பொதுமக்கள் காவல் நிலையத்தில் உள்ள காவலா்களை எந்த நேரத்திலும் சந்தித்து குறைகளை கூறலாம். முடியாத சூழ்நிலையில் பொதுமக்கள் இருக்கும் இடத்துக்கே நேரடியாக வந்து அவா்களின் குறைகளைக் கேட்டறிந்து தீா்வு காணும் விதமாக இது போன்ற முகாம்கள் அவ்வப்போது நடத்தப்படும். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT