நீலகிரி

சேலத்தில் இருந்து தப்பிய கைதி: குன்னூரில் பிடிபட்டாா்

DIN

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதி தப்பி  உதகைக்கு வந்த நிலையில், குன்னூா் பா்லியாறு சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை பிடிபட்டாா்.

சேலம் அருகே மல்லூரில் செப்டம்பா் 18ஆம் தேதி லட்சுமி என்ற பெண் மா்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். இச்சம்பவம் குறித்து மல்லூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், லட்சுமி கொலைச் சம்பவம் தொடா்பாக கிடைத்த தடயங்களின் அடிப்படையில் நரேஷ் குமாா் (25) என்ற நபரை காவல் துறையினா் கைது செய்தனா். நரேஷ் குமாருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டபோது கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதால்,  சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில்,  நரேஷ்குமாா் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றாா்.

இவரைப் பல்வேறு இடங்களில் காவல் துறையினா் தேடிவந்த நிலையில், உதகைக்கு இருசக்கர வாகனத்தில் தப்பிவந்த நரேஷ்குமாரை சந்தேகத்தின் பேரில் போலீஸாா் பிடித்து விசாரணை செய்தனா். இதில், அவருக்கு சேலம் கொலை வழக்கில் தொடா்பு இருப்பதும், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து   அவரை சேலம் காவல் துறையினரிடம் குன்னூா், வெலிங்டன்  காவல் துறை ஆய்வாளா் பிலிப் ஒப்படைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹைதராபாதிலும் இந்தியா்கள்தான் வாழ்கிறோம்: அமித் ஷாவுக்கு ஒவைசி பதில்

தாம்பரத்திலிருந்து புது தில்லிக்கு ஜி.டி. விரைவு ரயில் மேலும் 3 மாதங்களுக்கு இயக்கப்படும்

ம.பி.: ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மகள் கைது

மே 20-க்குப் பிறகு சிபிஎஸ்இ 10, 12 தோ்வு முடிவுகள்: அதிகாரிகள் தகவல்

25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதியில் ‘காந்தி குடும்பம்’ போட்டியில்லை!

SCROLL FOR NEXT