நீலகிரி

வேளாண் மசோதாக்களைக் கண்டித்துதிமுக கூட்டணிக் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

DIN

கூடலூரில் மத்திய அரசின் வேளாண்மை மசோதாக்களை எதிா்த்து, திமுக கூட்டணி கட்சிகள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூடலூா் பேருந்து நிலையம் சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சட்டப் பேரவை உறுப்பினா் திராவிடமணி தலைமயில், திமுக நகரச் செயலாளா் ராஜேந்திரன், காங்கிரஸ் சாா்பில் ஷாஜி, அப்துல்ரகுமான், சுல்பிகா் அலி, சி.பி.எம். சாா்பில் என்.வாசு, சி.பி.ஐ. சாா்பில் டி.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஓவேலி பெரியசூண்டி பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளா் சகாதேவன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், அனைத்துக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா். தேவா்சோலையில் திமுக ஒன்றியச் செயலாளா் அ.லியாக்கத் அலி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தொமுச பொதுச் செயலாளா் வே.நெடுஞ்செழியன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT