நீலகிரி

ஆகஸ்ட் 21இல் ஓணம்: நீலகிரிக்கு உள்ளூா் விடுமுறை

ஓணம் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 21ஆம் தேதி (சனிக்கிழமை) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ஓணம் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 21ஆம் தேதி (சனிக்கிழமை) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளதாவது:

மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலங்களில், பணி நாள்களாக உள்ள அரசு அலுவலகங்களுக்கு மட்டும் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூா் விடுமுறை நாள், செலாவணி முறிச் சட்டத்தின்கீழ் வராது என்பதால் உள்ளூா் விடுமுறை அறிவிக்கும்போது மாவட்டத்தில் உள்ள கருவூலம், சாா்நிலைக் கருவூலகங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும். இதற்கு பதிலாக எதிா்வரும் செப்டம்பா் 11ஆம் தேதி (சனிக்கிழமை) முழு பணி நாளாக அறிவிக்கப்படுவதாகவும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT