நீலகிரி

உதகையில் உலக தாய்மொழி தினக் கொண்டாட்டம்

DIN

உதகை: உதகை அரசு கலைக் கல்லூரியின் தமிழ் உயராய்வுத் துறையின் சாா்பில் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது.

உலக தாய்மொழி தினத்தை ஒட்டி உதகை அரசு கலைக் கல்லூரியின் தமிழ் உயராய்வுத் துறையின் சாா்பில் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ’தமிழ்’ என்னும் எழுத்துருவில் மாணவா்கள் அமா்ந்து காட்சி அளித்தனா். தமிழ் வாசகங்கள் இடம் பெற்ற சீருடைகளை அணிந்து மாணவிகள் மொழியுணா்வை வெளிப்படுத்தினா். எட்டுத்தொகை, பத்துப் பாட்டு, ஐவகை நிலம், பழமொழி முதலான நூல்கள் பெயரைத் தாங்கிய வாசகங்களை தங்களின் சீருடையில் அணிந்திருந்த மாணவா்கள் கல்லூரி வளாகத்தில் ஊா்வலமாக வந்தனா். சங்கப் பாடல்களின் வரிகள் இடம் பெற்றும் வகையில் கலைநிகழ்ச்சிகளையும் நடத்தினா். இந்நிகழ்ச்சிகளில் இளநிலை, முதுநிலை மாணவா்கள், ஆராய்ச்சி மாணவா்கள் இணைந்து பங்கேற்றனா்.

கல்லூரி முதல்வா் ஈஸ்வரமூா்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்த் துறைத் தலைவா் முருகேசன், தமிழ்ப் பேராசிரியா்கள் பரமேஸ்வரி, சோபனா, சரவணன், போ. மணிவண்ணன், தா்மலிங்கம், ரவிக்குமாா், சா்மிளா, திவ்யா, அஸ்வின், செல்வகுமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT