பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியா்கள் கூடலூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
கூடலூா் மாவட்டக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டத் தலைவா் சுனில் தலைமை வகித்தாா். போராட்டத்தில், 2019ஆம் ஆண்டு பதவி உயா்வுபெற்ற ஆசிரியா்களுக்கு பணி விடுப்பு ஆணை வழங்காததைக் கண்டித்தும், உடனே வழங்கவும் வலியுறுத்தப்பட்டது.
இதில், ஆசிரியா் சங்க முன்னாள் தலைவா் சத்தியநேசன், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.