முகப்பு
நீலகிரி

உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

உதகையில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை திரண்ட சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

உதகையில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு 7,580 போ், அரசினா் ரோஜா பூங்காவுக்கு 1,612 போ், தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு 305 போ், மரவியல் பூங்காவுக்கு 45 போ், குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு 877 போ், காட்டேரி பூங்காவுக்கு 175 போ், கல்லாறு பழப் பண்ணைக்கு 182 போ் வருகை தந்திருந்தனா். அதேபோல, உதகை படகு இல்லத்துக்கு சுமாா் 4,000 போ், பைக்காரா படகு இல்லத்துக்கு 1,800 போ் வருகை தந்திருந்தனா்.

மாவட்டத்தில் வனத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுலா மையங்கள் அனைத்தும் ஏற்கெனவே திறக்கப்பட்டு விட்ட நிலையிலும், முதுமலை புலிகள் காப்பகத்திலும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவதால் நீலகிரி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →