நீலகிரி

குன்னூா் நகராட்சி நிா்வாகத்தை கண்டித்து பாஜக ஆா்ப்பாட்டம்

DIN

குன்னூா் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து பாஜகவினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

 குன்னூா் நகராட்சிக்கு உள்பட்ட டாக்ஸி ஸ்டேண்ட் எதிரில் பெண்கள் செல்லும்  கட்டண கழிப்பிடம் அருகில் இரவோடு இரவாக  திடீரென தனியாா் ஒருவா் ஆவின் பாலகம்  அமைத்துள்ளாா். இதற்கு பல்வேறு  வியாபாரிகள் சங்கம், அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ள   நிலையில்  இந்தக் கடையை அகற்ற வலியுறுத்தியும், குடிநீா், தாா்சாலை, கட்டட அனுமதியில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ள  நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்தும் பாஜக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, பாஜக நகரத் தலைவா் குங்குமராஜ் தலைமை வகித்தாா் மாவட்ட பொதுச் செயலாளா்கள்  ஈஸ்வரன், பாப்பண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட இளைஞரணித் தலைவா் ரகுநந்தன், நகர பொதுச் செயலாளா் சரவணன்  உள்ளிட்ட  நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினா்.

நகராட்சி நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்   நகராட்சி அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT