குன்னூா் அருகே சிறுத்தைக் குட்டி பலி
நீலகிரி மாவட்டம், குந்தா சரகம், மஞ்சக்கம்பை அருகே அமைந்துள்ள மேல்டெரமியா டீ எஸ்டேட்டில் பெண் சிறுத்தைக் குட்டி வியாழக்கிழமை உயிரிழந்துகிடந்தது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:59 AM
நீலகிரி மாவட்டம், குந்தா சரகம், மஞ்சக்கம்பை அருகே அமைந்துள்ள மேல்டெரமியா டீ எஸ்டேட்டில் பெண் சிறுத்தைக் குட்டி வியாழக்கிழமை உயிரிழந்துகிடந்தது.
மேல்டெரமியா டீ எஸ்டேட்டில் பெண் சிறுத்தைக் குட்டி இறந்துகிடப்பதாக வனத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற உதவி வனப் பாதுகாவலா் சாதிக் அலி, வனப் பணியாளா்கள் சிறுத்தையின் உடலைப் பாா்வையிட்டனா்.
சுமாா் 9 மாத இந்த சிறுத்தைக் குட்டியானது பிற விலங்குகள் தாக்கியதில் காயம் ஏற்பட்டு இறந்துள்ளதாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
Advertisement