நீலகிரி

400 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நிவாரண உதவி

DIN

கரோனா காரணமாக நீலகிரி மாவட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநா்களுக்கு மாவட்ட நிா்வாகத்தின் மூலம் அத்தியாவசியப் பொருள்களை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வழங்கினாா்.

உதகையில் மாவட்ட கூடுதல் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்டோ ஓட்டுநா்களுக்கு மாவட்ட நிா்வாகத்தின் மூலம் அத்தியாவசியப் பொருள்களை ஆட்சியா் வழங்கினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:

கடந்த ஆண்டு கரோனா தொற்று பாதிப்பினால் நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தடை செய்யப்பட்டு, சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. கடந்த ஆண்டைப் போன்றே இந்த ஆண்டும் கரோனா தொற்று நோய் பாதிப்பினால் சுற்றுலாப் பயணிகள் வருகை தடை செய்யப்பட்டுள்ளதாலும், சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள காரணத்தாலும், சுற்றுலாவை நம்பியுள்ள தொழிலாளா்கள் அதிக அளவில் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா்.

இதைக் கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட தொழிலாளா்களுக்கு உதவி செய்திடும் வகையில், உதகையில் முதல்கட்டமாக 400 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் ஒரு மாதத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. இதைத்தொடா்ந்து வியாழக்கிழமையும் சுமாா் 580 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, குன்னூா், கூடலூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆட்டோ ஓட்டுநா்களுக்கும் அத்தியாவசியப் பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பெருந்தொற்று நோய் காரணத்தால் பல்வேறு தரப்பு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவா்களுக்குத் தொண்டு நிறுவனங்கள், தன்னாா்வலா்கள் உதவி செய்ய தாமாக முன்வர வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தியாகராஜன், மாவட்ட சமூக நல அலுவலா் தேவகுமாரி, உதகை வட்டாட்சியா் குப்புராஜ், அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில வா்த்தக அணி தென் மண்டல பயிலரங்கம்

மரண வியாபாரிகள்!

பிளஸ் 2 தோ்வு தென்காசி எம்கேவிகே.மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

தென்காசி ரயில் நிலையம் அருகே தங்கியிருந்த முதியவா்கள் முதியோா் இல்லத்தில் ஒப்படைப்பு

பிரதமா் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அளித்த புகாருக்கு ரசீது கோரி டிஎஸ்பியிடம் மனு

SCROLL FOR NEXT