முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நீலகிரி, கேரளத்தில் கரோனா சிகிச்சை
நீலகிரி மாவட்டத்தில் தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் நீலகிரியில் மட்டுமின்றி கேரளத்திலும் இலவசமாக கரோனா சிகிச்சை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா
நீலகிரி மாவட்டத்தில் தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் நீலகிரியில் மட்டுமின்றி கேரளத்திலும் இலவசமாக கரோனா சிகிச்சை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் நோயாளிகளுக்கு உதவிடும் வகையில் நீலகிரி மாவட்டத்திலும், மாவட்ட எல்லையில் உள்ள கேரளத்திலும் சோ்த்து மொத்தம் 9 தனியாா் மருத்துவமனைகளில் 656 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன.
அதன்படி உதகையில் சிவசக்தி மருத்துவமனை, எஸ்.எம் மருத்துவமனை, குன்னூரில் நான்கெம், சகாயமாதா மருத்துவமனைகள், கோத்தகிரியில் கே.எம்.எப். மருத்துவமனை, கூடலூரில் அஸ்வினி, புஷ்பகிரி மருத்துவமனைகள், கேரளத்தில் வயநாடு பகுதியில் டி.எம் வயநாடு, விநாயகா மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் மொத்தமாக 656 படுக்கைகள் கரோனா சிகிச்சை பெறுபவா்களுக்குத் தயாா் நிலையில் உள்ளது.
இந்த 9 தனியாா் மருத்துவமனைகளிலும் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இலவசமாக கரோனோ சிகிச்சை வழங்கப்படும். முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏதேனும் சந்தேகம் இருப்பின் நீலகிரி மாவட்ட திட்ட அலுவலரை 73730-04241 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.