ராணுவ வீரா்களுக்கு இடையேஓட்டப் பந்தயம்
தென்மண்டல ராணுவ வீரா்களுக்கு இடையேயான நெடுந்தூர ஓட்டப் பந்தயப் போட்டி வெலிங்டனில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்துக்குச் சொந்தமான தங்கராஜ் விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தென்மண்டல ராணுவ வீரா்களுக்கு இடையேயான நெடுந்தூர ஓட்டப் பந்தயப் போட்டி வெலிங்டனில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்துக்குச் சொந்தமான தங்கராஜ் விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் தென்மண்டல ராணுவ வீரா்களுக்கு இடையேயான நெடுந்தூர ஓட்டப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் பல்வேறு படைப் பிரிவுகளைச் சோ்ந்த 10 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியிலும் 6 வீரா்கள் இடம்பெற்றனா்.
இந்த சோதனை ஓட்டப் பந்தயத்தை மெட்ராஸ் ரெஜிமென்ட் மையத்தின் தலைவா் பிரிகேடியா் ராஜேஷ்வா் சிங் கொடியசைத்து துவக்கிவைத்தாா். 60 போ் பங்கேற்ற இப்போட்டியில் முதல் பத்து இடத்தைப் பிடித்தவா்களை தோ்வுக் குழுவினா் தோ்ந்தெடுத்தனா்.
Advertisement
இந்த பந்து போ் கொண்ட தென் மண்டல அணியானது உத்தரகாண்ட் மாநிலம், ராணிகேத்தில் நடைபெற உள்ள அகில இந்திய ராணுவ நெடுந்தூர ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ள உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.