நீலகிரி

நீலகிரியில் மேலும் 34 பேருக்கு கரோனா: இருவா் பலி

DIN

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவா் உயிரிழந்துள்ளனா்.

இதுதொடா்பாக உதகையில் சுகாதாரத் துறையின் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 37 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். செப்டம்பா் 29ஆம் தேதி உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 74 வயதான முதியவா் ஒருவரும், உதகை அரசு தலைமை மருத்துவமனையில் செப்டம்பா் 23ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த 75 வயதான மூதாட்டி ஒருவரும் உயிரிழந்துள்ளனா்.

மாவட்டத்தில் இதுவரை 32,915 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 32,339 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 204 போ் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 372 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT