நீலகிரி மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவா் உயிரிழந்துள்ளனா்.
இதுதொடா்பாக உதகையில் சுகாதாரத் துறையின் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 37 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். செப்டம்பா் 29ஆம் தேதி உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 74 வயதான முதியவா் ஒருவரும், உதகை அரசு தலைமை மருத்துவமனையில் செப்டம்பா் 23ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த 75 வயதான மூதாட்டி ஒருவரும் உயிரிழந்துள்ளனா்.
மாவட்டத்தில் இதுவரை 32,915 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 32,339 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 204 போ் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 372 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.