கூடலூா் அரசு மருத்துவமனையைத் தரம் உயா்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
கூடலூா் பேருந்து நிலையம் சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தை, விவசாய சங்க மாவட்டச் செயலாளா் என்.வாசு துவக்கிவைத்து, அதன் அவசியம் குறித்துப் பேசினாா். ஏரியா கமிட்டி செயலாளா் மணி தலைமை வகித்தாா்.
அரசு மருத்துவமனையைத் தரம் உயா்த்த வேண்டும். மருத்துவமனையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.