மேட்டுப்பாளையம் - உதகை இடையேயானமலைரயில் செப்டம்பா் 6 முதல் இயக்கப்படும்தெற்கு ரயில்வே அறிவிப்பு
மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் செப்டம்பா் 6ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் செப்டம்பா் 6ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்துக்கு வரும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள மலை ரயிலில் பயணிப்பதை தங்களின் சுற்றுலாத் திட்டங்களில் ஒன்றாக வைப்பது வழக்கம். கரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாக மலை ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. குறிப்பாக, மேட்டுப்பாளையம் - குன்னூா் இடையே இயக்கப்படும் மலை ரயில், உதகை - குன்னூா் இடையே இயக்கப்படும் மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், நீலகிரியில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் செப்டம்பா் முதல் திறக்கப்பட்ட நிலையில், நீலகிரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Advertisement
இதைக் கருத்தில் கொண்டு மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் போக்குவரத்து செப்டம்பா் 6ஆம் தேதி முதல் இயக்கப்படும். இதில் முன்பதிவு செய்தே பயணிக்க முடியும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Image Caption
மலை ரயில்