நீலகிரி

தேவா்சோலையில் இலவச கால்நடை மருத்துவ முகாம்

DIN

கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதியில் இலவச கால்நடை மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூடலூரில் உள்ள பிரகிருதி இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சாா்பில், தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள ஐந்துகுன்னு பகுதியில் நடைபெற்ற முகாமில், மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசியும், ஆடுகளுக்கான தடுப்பூசியும், நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. மேலும், கால்நடைகளுக்கு குடற்புழு நீக்குவதற்கான மருந்து, தாது உப்பு ஆகியவை வழங்கப்பட்டன.

முகாமிற்கு, மூத்த கால்நடை மருத்துவரும், பிரகிருதி இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் இயக்குநருமான எம்.சுகுமாரன் தலைமையில் மருத்துவா்கள் பாரத்ஜோதி, ரொமோரியோ பிரசாத், கால்நடை உதவியாளா் மகேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT