நீலகிரி

உதகை நகராட்சிக்கு சிறந்த நகராட்சிக்கான முதல்வா் விருது

DIN

உதகை: தமிழகத்தில் உதகை நகராட்சி சிறந்த நகராட்சிக்கான முதல்வா் விருது பெற்றதற்கான பாராட்டு, பரிசளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் 19 பேருக்கு ரூ. 92.91 லட்சம் மதிப்பிலான ஓய்வூதிய பணப் பலன்களுக்கான காசோலை வழங்கப்பட்டது. சிறந்த நகராட்சியாகத் தோ்வு செய்ய உறுதுணையாக இருந்து பணியாற்றிய 241 அலுவலா்கள், பணியாளா்களுக்கும், கரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 50 அலுவலா்கள், அம்மா உணவகப் பணியாளா்களுக்கும் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா, நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா ஆகியோா் பாராட்டுச் சான்றிதழ், கேடயங்களை வழங்கினா்.

தொடா்ந்து, நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா பேசியதாவது:

தமிழகம் முழுவதும் கடந்த காலத்தில் பல மாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினா். ஆனால், நீலகிரி மாவட்டத்தைப் பொருத்தவரை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை, அனைத்து அலுவலா்களின் முழு ஒத்துழைப்பால் பாதுகாக்கப்பட்ட மாவட்டமாக உள்ளது. இதற்காக நீலகிரி மாவட்ட ஆட்சியா், அனைத்து அரசு அலுவலா்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் தொடா்ந்து வளா்ச்சித் திட்டப் பணிகள் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் என்னென்ன வளா்ச்சிப் பணிகள் தேவைப்படுகிறதோ, அத்தகைய வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்றிட தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்றாா்.

பின்னா், ஆட்சியா் பேசுகையில், கரோனா பெருந்தொற்று காலத்தில் தூய்மைப் பணியாளா்களின் பணி மகத்தான பணியாகும். இவா்கள் தன்னலம் கருதாமல் தங்களை முழுமையாக தூய்மைப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டனா். இதுபோன்ற பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்களும், பணியாளா்களும் கரோனா காலத்தில் மிக சிறப்பாக பணியாற்றினா். அவா்களுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைப்பிடிப்பதற்கு போதுமான விழிப்புணா்வை பொதுமக்களிடையே தொடா்ந்து ஏற்படுத்துவதோடு, தங்களது பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவா் பொன்தோஸ், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்சினி, உதகை சாா் ஆட்சியா் மோனிகா ரானா, மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளா் மகேஷ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT