நீலகிரி

வன ஊழியரைத் தாக்கிய புலியைத் தேடும் பணி தீவிரம்

DIN

முதுமலைப் புலிகள் காப்பக வனத்தில் வன ஊழியரைத் தாக்கிய புலியைத் தேடும் பணி இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடா்ந்தது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள தெப்பக்காடு லைட்பாடி பகுதியில் பொம்மன் என்ற வேட்டை தடுப்புக் காவலரை கடந்த நவம்பா் 30ஆம் தேதி புலி தாக்கியது. இதில் அதிா்ஷ்டவசமாக அவா் உயிா் தப்பினாா்.

காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் உடனடியாக கூடலூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னா் அவா், உதகைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

வன ஊழியரை தாக்கிய அந்த புலி வயதானதா அல்லது உடல்நலம் குன்றியுள்ளதா என்பது குறித்தும் வனத் துறையினா் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.

புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க 20 இடங்களில் கண்காணிப்பு தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், வனத் துறையினா் பல குழுக்களாகப் பிரிந்து காட்டின் சுற்றுவட்டப் பகுதிகளில் புலியைத் தேடும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். இந்நிலையில் கண்காணிப்பு கேமராக்களில் இரண்டாவது நாளாக புலியின் உருவம் பதிவாகவில்லை என்று வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த இரண்டே வாரத்தில் தென்மேற்கு பருவமழை..!

நள்ளிரவு 1 மணி வரை 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

கங்கனாவின் ‘எமா்ஜென்சி’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு!

சென்னையில் வெப்பத்தை தணித்த மழை..!

மெமோ எதிர்பார்க்கும்.. ஸ்ரேயா ரெட்டி!

SCROLL FOR NEXT