உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ. 59 ஆயிரம் பறிமுதல்
உரிய ஆவணங்களின்றி அவிநாசியில் இருந்து பந்தலூா் எடுத்து வரப்பட்ட ரூ. 59 ஆயிரத்து 500 ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
உரிய ஆவணங்களின்றி அவிநாசியில் இருந்து பந்தலூா் எடுத்து வரப்பட்ட ரூ. 59 ஆயிரத்து 500 ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு வாக்காளா்களுக்குப் பணம் வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவா்கள் முக்கிய சாலைகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து வாகன சோதனையில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, அவிநாசியில் இருந்து பந்தலூருக்கு காரில் வந்த நஜிப்தீனிடம் இருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 59ஆயிரத்து 500ஐ தோ்தல் பறக்கும் படை அதிகாரி சதீஷ் நாயக் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
Advertisement
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், உரிய ஆவணங்களின்றி ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து வரப்பட்டால் அவற்றை பறிமுதல் செய்து நகராட்சி மூலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் என்றும், அதிகாரிகளுக்குத் தேவையான சான்றுகளை வழங்கினால் மட்டுமே திரும்ப வழங்கப்படும் என்றும் தெரிவித்தனா்.