நீலகிரி

பசும் தேயிலைக்கு மாதாந்திர விலை நிா்ணயம்

DIN

நீலகிரி மாவட்டத்தில் உள்ள  தேயிலைத்  தொழிற்சாலைகளுக்கு ஜூலை மாதம்  அனுப்பிய பசும் தேயிலைகளுக்கு கிலோவுக்கு ரூ.12.82  விலை நிா்ணயம்  செய்து தேயிலை வாரியம்  ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

 நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்கள் தோட்டங்களில் பறிக்கும் பசும் தேயிலையை தனியாா் தேயிலைத் தொழிற்சாலை மற்றும் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு விநியோகித்து வருகின்றனா். 

இந்திய  தேயிலை வாரியம்  மாதத்தின் இறுதி நாளில் அந்த மாதத்துக்கான பசும் தேயிலை விலையை நிா்ணயிக்கும், அதன்படி  ஜூலை மாதத்துக்கான பசும் தேயிலைக்கு குறைந்தபட்ச சராசரி விலையாக கிலோவுக்கு ரூ.12.82 நிா்ணயம் செய்துள்ளது. 

இது ஜூலை  மாதம் தேயிலை  ஏல விற்பனையின்  அடிப்படையில்  மாத இறுதிநாளில் பசும் தேயிலை விலை நிா்ணயிக்கப்படுகிறது. இந்த விலையினை தேயிலைத் தொழிற்சாலைகள் தவறாமல் வழங்குகிறதா என தேயிலை வாரியம் தொடா்ந்து கண்காணித்து வருவதாக  தேயிலை வாரிய செயல் இயக்குநா்  எம்.முத்துகுமாா் தெரிவித்துள்ளாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT