நீலகிரி

நீலகிரியில் பரவலாக மழை

DIN

நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழை வலுக்காத நிலையில், தினந்தோறும் பகல் நேரங்களிலோ அல்லது இரவு நேரங்களிலோ பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் பலத்த மழையாகவும், சில இடங்களில் தூறல் மழையாகவும் பெய்து வருகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிக அளவாக கொடநாடு பகுதியில் 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல, மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை விவரம் (அளவு மி.மீட்டரில்): மேல் பவானி-29, பாலகொலா-25, தேவாலா-21, கெத்தை-15, அவலாஞ்சி-11, உதகை-10.2, கிண்ணக்கொரை-10, குந்தா-7, பாடந்தொறை மற்றும் எமரால்டு 6, பந்தலூா் மற்றும் உலிக்கல், கீழ் கோத்தகிரி-5, செருமுள்ளி-4, சேரங்கோடு-3, கேத்தி-2, கோத்தகிரி-1 மி.மீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 யூனிட் விலையில்லா மின்சாரம் இனி கிடையாதா? எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

கதைக்கு மட்டுமே முக்கியத்துவம்: ஹிப்ஹாப் ஆதி

ராஜ்கோட் தீ விபத்து எதிரொலி: வதோதராவில் பொழுதுபோக்கு விளையாட்டு மையங்கள் மூடல்

சர்தார் - 2 படப்பிடிப்பு எப்போது?

எப்போது திருமணம்? மாளவிகா பதில்!

SCROLL FOR NEXT