கூடலூா்: முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள வனப் பகுதியில் பருவ மழைக்கு முந்தைய வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி புதன்கிழமை துவங்கியது.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி,
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள உள்வட்ட வனப் பகுதியான முதுமலை ,தெப்பக்காடு, மசினகுடி, நெலாக்கோட்டை, காா்குடி ஆகிய ஐந்து வனச் சரகங்களிலுள்ள வனப் பகுதியில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி புதன்கிழமை துவங்கியது. நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளா்கள் பல குழுக்களாக பிரிந்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
கணக்கெடுப்பில் சேகரித்த தடயங்கள், கண்காணிப்புக் கேமராக்களில் பதிவானவை மற்றும் கண்ணில் பாா்த்தவை பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.