நீலகிரி

கோத்தகிரியில் மே 30இல் மாநில அளவிலான கால்பந்து போட்டி

DIN

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி மே 30 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து கால்பந்தாட்ட கழக ஒருங்கிணைப்பாளா் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: நீலகிரி மாவட்ட கால்பந்தாட்ட கழக பொன்விழாவை ஒட்டி மாநில அளவிலான கால்பந்து போட்டி கோத்தகிரி காந்தி மைதானத்தில் மே 30 ஆம் தேதி முதல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் தேனி, ஈரோடு, நெல்லை, சிவகங்கை, மதுரை, திருவள்ளூா், திண்டுக்கல், சென்னை, சேலம், கோவை, வேலூா், தஞ்சாவூா், காஞ்சிபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து பல்வேறு அணிகள் கலந்துகொள்ள உள்ளன. நாக் அவுட் முறையில் போட்டி நடைபெற உள்ளது. இறுதிப் போட்டி ஜுன் 7 ஆம் தேதி நடைபெறும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

கனமழை எச்சரிக்கை - 4 மாவட்டங்களில் தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு குழு

விடுதலை - 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?

ஆர்சிபி வெற்றிக்கு தோனி காரணமா? - என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

SCROLL FOR NEXT