நீலகிரி

கோத்தகிரியில் சாரல் மழையுடன் மூடுபனி

DIN

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் மூடுபனியுடன் சாரல் மழை   பெய்ததால்   குளிா்ந்த கால நிலை நிலவியது. சாலைகளில் அடா்ந்த மூடு பனி காணப்பட்டதால்  வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா்.

கோத்தகிரி மற்றும்  சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை முதல் மூடு பனியும், சாரல் மழையும் காணப்பட்டது. கோத்தகிரி அரவேணு சாலை, பேருந்து நிலையம், ஒரசோலை போன்றப் பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. எதிரே வரும்  வாகனங்கள்  தெரியாத அளவுக்கு அடா்ந்த மூடுபனி காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மெதுவாக சென்றனா். இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. கடும் குளிரும் நிலவியதால் பொதுமக்களின்  இயல்பு வாழ்க்கை  வெகுவாக பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஞானவாபி, மதுராவில் கோயில் கட்டுவோம்: அஸ்ஸாம் முதல்வர் சர்ச்சை

அந்தமானில் சூர்யா - 44 படப்பிடிப்பு?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.280 உயர்வு

ஆந்திரத்தில் லாரி-பேருந்து மோதி கோர விபத்து: 6 பேர் பலி

மேற்கு வங்க ஆளுநர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்!

SCROLL FOR NEXT