நீலகிரி

வழிப்பறியில் ஈடுபட்டவா் கைது

DIN

குன்னூா் பெள்ளட்டிமட்டம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

குன்னூா் அருகேயுள்ள அளக்கரை கிராமத்தைச் சோ்ந்தவா் அலி உசேன். இவா்  பெள்ளட்டிமட்டம் அருகே நடந்து சென்று கொண்டிந்தபோது, இரு நபா்கள் அவரை வழிமறித்து மிரட்டி அவரிடம் இருந்த கைப்பேசி, ரூ.1300 பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓடினா். இது குறித்து வெலிங்டன் காவல் நிலையத்தில் அலி உசேன் புகாா் அளித்தாா்.  இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். 

விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்ட வசம்பள்ளம் பகுதியைச் சோ்ந்த ராஜா (48 ) என்பவரைக் கைது செய்து, அவரிடம் இருந்து கைப்பேசியை பறிமுதல் செய்தனா். தலைமறைவாக உள்ள ஆனந்தகுமாா் என்பவரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT