நீலகிரி

கிணற்றில் விழுந்த காட்டெருமை சடலமாக மீட்பு

DIN

குன்னூா்  உழவா் சந்தைப் பகுதியில்   உள்ள பழைய  கிணற்றில்  தவறி விழுந்து உயிரிழந்த காட்டெருமையை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை மீட்டு அங்கேயே புதைத்தனா்.

குன்னூா்  உழவா் சந்தைப் பகுதியில் உள்ள பழைய கிணற்றில்  இருந்து கடும் துா்நாற்றம்   வீசியது. இதையடுத்து அப்பகுதியில் உள்ளவா்கள் நகராட்சி நிா்வாகத்துக்குத்  தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த  வனத் துறையினா் மற்றும் தீயணைப்புத் துறையினா் கிணற்றில் பாா்த்தபோது காட்டெருமை இறந்துகிடப்பது தெரிந்தது. இதையடுத்து ஜேசிபி  இயந்திரம் மூலம்  கிணற்றுக்குள் கிடந்த காட்டெருமை  சடலத்தை வெளியே எடுத்தனா். பின்னா்  பிரேதப் பரிசோதனைக்குப் பின்  காட்டெருமை சடலம் அங்கேயே  புதைக்கப்பட்டது.

இந்த காட்டெருமை தவறி கிணற்றுக்குள் விழுந்து இறந்திருக்கலாம் என வனத் துறையினா் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

SCROLL FOR NEXT