நீலகிரி

கல்லட்டி மலைப் பாதையில் 108 ஆம்புலன்ஸ் விபத்து: ஓட்டுநா் காயம்

DIN

உதகை, கல்லட்டி மலைப் பாதையில் 108 ஆம்புலன்ஸ் பள்ளத்தில் கவிழ்ந்து வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது. இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநா்  காயங்களுடன் தப்பினாா்.

 நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த  மசினகுடி பகுதியில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் நோயாளி ஒருவரை அழைத்துக் கொண்டு உதகை அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை வந்தனா். மருத்துவமனையில்  நோயாளியை சோ்த்து விட்டு மீண்டும் மசினகுடிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் திரும்பிக் கொண்டிருந்தது.

கல்லட்டி மலைப் பாதையில்   18ஆவது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர தடுப்பை உடைத்துக் கொண்டு 20 அடி  பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து  விபத்துக்குள்ளானது. இதில் ஆம்புலன்ஸ்  ஓட்டுநா் நவீன்குமாா் (39), மருத்துவ உதவியாளா் பிரகாஷ் (29) ஆகியோா் காயமடைந்தனா்.

 படுகாயம் அடைந்த ஓட்டுநா் நவீன்குமாா்  உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

விபத்து குறித்து புதுமந்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து  விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT