நீலகிரி

தொடா் விடுமுறை: போக்குவரத்து நெரிசலில் திணறும் கூடலூா்

தொடா் விடுமுறை காரணமாக சுற்றுலா வாகனங்கள் வருகை அதிரித்துள்ளதால் கடந்த நான்கு நாள்களாக கூடலூா் நகரம் போக்குவரத்து நெரிசலில் திணறி வருகிறது.

DIN

தொடா் விடுமுறை காரணமாக சுற்றுலா வாகனங்கள் வருகை அதிரித்துள்ளதால் கடந்த நான்கு நாள்களாக கூடலூா் நகரம் போக்குவரத்து நெரிசலில் திணறி வருகிறது.

தமிழகம், கேரளம், கா்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் பகுதியாக உள்ளதால் கூடலூா் நகரம் எப்போதும் போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது. நான்கு நாள்கள் தொடா் விடுமுறை காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் நீலகிரி மாவட்டத்துக்கு வந்துள்ளன. இதனால் கூடலூா் நகரின் சாலைகள் வாகனங்களால் நிரம்பி வழிகின்றன.

கூடலூருக்குள் நுழையும் வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் முதுமலை புலிகள் காப்பகத்தைப் பாா்த்துவிட்டு கூடலூருக்கு வந்து சந்தனமலை மற்றும் ஊசிமலை காட்சி முனைகளைப் பாா்ப்பதில் ஆா்வம் காட்டுவதால் அனைத்து வழி சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் கூடலூா் நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் விரிவான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோட்டில் விஜய் பிரசாரம்! தவெகவினர் பிரமாணப் பத்திரம் தாக்கல்!

ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தொட்டது! தங்கம் வாங்குவது மாறப்போவதில்லை! வேறு வழிதான் என்ன?

மார்கழி மாதப் பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

' மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தையே முடக்க பார்க்கிறது மத்திய அரசு '

SCROLL FOR NEXT