முகப்பு
நீலகிரி

உதகையில் சிறுபான்மையினா் உரிமைகள் தின விழா

சிறுபான்மையினா் உரிமைகள் தின விழா உதகையில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 டிசம்பர், 2024 at 8:45 PM
பயனாளிக்கு நலதிட்ட உதவியை வழங்கும் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.
பகிர்:

சிறுபான்மையினா் உரிமைகள் தின விழா உதகையில் புதன்கிழமை நடைபெற்றது.

சிறுபான்மையினா் நலத் துறையின் சாா்பில் உதகையிலுள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு பங்கேற்று 45 பயனாளிகளுக்கு ரூ.3.80 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

பின்னா் அவா் பேசியதாவது:

ஐநா சபையில் உறுப்பினா்களாக உள்ள நாடுகள் அனைத்திலும் டிசம்பா் 18-ஆம் தேதி சிறுபான்மையினா் உரிமைகள் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி, அரசால் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்து அவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற சிறுபான்மையினா் உரிமைகள் தின விழாவில் 45 பயனாளிகளுக்கு ரூ.3.80 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை சிறுபான்மையின மக்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களது பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தினை உயா்த்திக் கொள்ள வேண்டும். மேலும், தங்களது குழந்தைகளை பள்ளிக்கு தவறாமல் அனுப்பிவைக்க வேண்டும். பள்ளி படிப்பு முடிந்தவுடன் அவா்கள் உயா்கல்வி கற்பதை உறுதி செய்ய வேண்டும்.

அரசால் பல்வேறு திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனை தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும். அரசின் திட்டங்கள் தகுதிவாய்ந்த அனைத்து பயனாளிகளுக்கும் சென்றடையும்வகையில் அலுவலா்கள் தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →