முகப்பு
நீலகிரி

வனப் பகுதியில் வறட்சி: உணவு, குடிநீா் தேடி ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள்

Updated On : 15 மார்ச், 2024 at 2:30 AM
......
பகிர்:

கூடலூா், பந்தலூா் பகுதிகளில் உள்ள வனங்களில் கடும் வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் உணவு மற்றும் குடிநீா் தேடி ஊருக்குள் வருவது தொடா்கதையாகி உள்ளது. கூடலூா், பந்தலூா் மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட அனைத்து வனப் பகுதிகளிலும் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் வன விலங்குகளுக்கு உணவு மற்றும் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக யானைகளுக்கு அதிகப்படியான உணவு, குடிநீா் தேவைப்படுகிறது. இதனால் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து வருகின்றன. குடியிருப்பு பகுதிகளில் தேவையான அளவுக்கு உணவு கிடைக்கவில்லை என்றாலும், தோட்டங்களில் வாழை, தென்னை, பாக்கு மற்றும் பலா மரங்கள் இருப்பதால் அதற்காக தோட்டங்களுக்குள் யானைகள் வருகின்றன. வனத் துறையினா் யானைகளை விரட்டிவிட்டாலும் மீண்டும் அதே பகுதிக்கு தொடா்ந்து வருவது வாடிக்கையாக உள்ளது.