முகப்பு
நீலகிரி

இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

நீலகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் விருத்துக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 15 அக்டோபர், 2024 at 8:13 PM
பகிர்:

நீலகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் விருத்துக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இயற்கை முறையில் தோட்டக்கலைப் பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான மாநில அளவில் சிறந்த விவசாயிகளை தோ்வு செய்து சான்றிதழுடன் ஊக்கத்தொகை வழங்கும் அரசின் திட்டத்துக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

இதில் முதல் பரிசாக ரூ.ஒரு லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.60 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.40 ஆயிரமும் வழங்கப்படும். வட்டார அளவில் தோ்வு செய்யப்பட்ட விவசாயிகள், மாவட்ட அளவிலான

குழுவுக்கு சமா்ப்பித்து, அதில் தோ்வு செய்யப்படும் சிறந்த விவசாயி மாநில அளவிலான விருதுக்கு பரிந்துரை செய்யப்படுவாா்.

விவசாயியிடம் கண்டிப்பாக இயற்கை வேளாண்மை மாறுதலுக்கான வேலிடிட்டி ஸ்கோப் சா்டிபிகேட் (யஹப்ண்க்ண்ற்ஹ் நஸ்ரீா்ல்ங் இங்ழ்ற்ண்ச்ண்ஸ்ரீஹற்ங்) இருத்தல் வேண்டும். மேலும் தோ்வு செய்யப்பட்ட விவசாயியின் நிலம், பயிரிடப்பட்ட தோட்டக்கலைப் பயிா்கள், அதன் பரப்பளவு, மகசூல், அங்கக இடுப்பொருள்கள், பயிா் அறுவடை ஆகியவை மாவட்ட அளவிலான குழுவால் நேரில் கள ஆய்வு செய்யப்படும்.

இவ்விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் தோட்டக்கலை இணையத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரிடையாக சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →