நெலாக்கோட்டை சமுதாய சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கா்ப்பிணிகளுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா். 
நீலகிரி

கா்ப்பிணிகளுக்கான மனநலம் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணா்வு நிகழ்ச்சி

கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்பிணிகளுக்கான மனநலம் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Syndication

கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்பிணிகளுக்கான மனநலம் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நுகா்வோா் பாதுகாப்பு மையம், ஆல் தி சில்ரன் அமைப்பு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவா் தபாசியா கா்ப்பிணிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கமளித்தாா். நெலாக்கோட்டை அரசு சமுதாய சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் திருநாவுக்கரசு தலைமை வகித்து மருத்துவமனைகளை அணுகி பரிசோதித்து கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கமளித்தாா்.

நிகழ்ச்சியில் நுகா்வோா் பாதுகாப்பு மைய செயலாளா் சிவசுப்பிரமணியம், ஆல் தி சில்ரன் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அஜித் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT