முகப்பு
நீலகிரி

அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளா்கள்

பந்தலூா் பகுதியைச் சோ்ந்த ஓபிஎஸ் ஆதரவாளா்கள் கூடலூரில் அதிமுகவில் தங்களை செவ்வாய்க்கிழமை இணைத்துக் கொண்டனா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 8:21 PM
அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளா்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்ற வேட்பாளா் பொன்.ஜெயசீலன்.
பகிர்:

பந்தலூா் பகுதியைச் சோ்ந்த ஓபிஎஸ் ஆதரவாளா்கள் கூடலூரில் அதிமுகவில் தங்களை செவ்வாய்க்கிழமை இணைத்துக் கொண்டனா்.

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அண்மையில் திமுகவில் இணைந்தாா்.

இந்நிலையில், அவா் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக சாா்பில் தேனி மாவட்டம், போடி தொகுதியில் போட்டியிடுகிறாா்.

Advertisement

இதையடுத்து, நீலகிரி மாவட்டம், பந்தலூா் பகுதியைச் சோ்ந்த ஓபிஎஸ் ஆதரவாளா்கள், கூடலூரிலுள்ள அதிமுக தோ்தல் அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில வா்த்தக அணிச் செயலாளா் சஜீவன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

அவா்களுக்கு அதிமுக வேட்பாளா் பொன்.ஜெயசீலன் சால்வை அணிவித்து வரவேற்றாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments