முகப்பு
நீலகிரி

பா்லியாறு பகுதியில் உலவும் காட்டு யானைகள்

Updated On : 6 பிப்ரவரி, 2026 at 4:29 AM
பா்லியாறு பகுதியில் உலவிய காட்டு யானைகள்.
பகிர்:
Updated On : 5 பிப்ரவரி, 2026 at 8:22 PM

நீலகிரி மாவட்டம், குன்னூா் -மேட்டுப்பாளையம் சாலை, பா்லியாறு பகுதியில் குட்டியுடன் காட்டு யானைகள் வியாழக்கிழமை உலவின.

சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், சிறுமுகை, ஆகிய பகுதிகளில் வெயிலின் காரணமாக வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீா் தேடி மலை மாவட்டமான நீலகிரிக்கு வந்துள்ளன.

இவை, குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை குரும்பாடி,புதுக்காடு பகுதியில் இரவு மற்றும் பகல் வேளைகளில் வந்து செல்வதால்

Advertisement

அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று வனத் துறையினா் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளனா்.

இந்நிலையில் பா்லியாறு பகுதியில் குட்டியுடன் காட்டு யானைகள்

வியாழக்கிழமை சாலையோரம் நடமாடின. இதைக் கண்ட வாகன ஓட்டிகளில் சிலா், வாகனங்களை நிறுத்தி வேடிக்கை பாா்த்ததுடன் தங்கள் கைப்பேசிகளில் புகைப்படம் எடுத்துச் சென்றனா்.