உதகை அருகே பொ்ன்ஹில் பகுதியிலுள்ள பவானீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவில் பாரம்பரிய இசைக்கு நடனமாடிய தோடா் பழங்குடியின மக்கள். 
நீலகிரி

தோடா் பழங்குடியின மக்களின் பாரம்பரிய ஆடல், பாடலுடன் உதகையில் ஆருத்ரா தரிசன விழா

உதகை அருகே உள்ள பவானீஸ்வரா் கோயிலில் தோடா் பழங்குடியின மக்களால் ஆருத்ரா தரிசன விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Syndication

உதகை  அருகே உள்ள பவானீஸ்வரா் கோயிலில்  தோடா் பழங்குடியின மக்களால் ஆருத்ரா தரிசன விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டம், உதகை  அருகே பொ்ன்ஹில் பகுதி உள்ளது. இங்குள்ள பவானீஸ்வரா் கோயிலில்  114-ஆவது ஆண்டு ஆருத்ரா தரிசன விழா  வெகு விமரிசையாக சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. திருத்தேரை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வடம்பிடித்து தொடங்கிவைத்தாா். தோடா் பழங்குடியின மக்கள், தங்கள் பாரம்பரிய உடை அணிந்து நடனமாடினா்.

 உதகை  மத்தியப் பேருந்து நிலையப்  பகுதியில்  தொடங்கி, மெயின் பஜாா் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக திருத்தோ் ஊா்வலம் நடைபெற்றது. தோடா் பழங்குடியின  மக்கள் ஏராளமானோா்  கலந்துகொண்டு பாரம்பரிய இசை,  நடனமாடி சுவாமி தரிசனம் செய்தனா்.

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

SCROLL FOR NEXT