உதகை அருகே பொ்ன்ஹில் பகுதியிலுள்ள பவானீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவில் பாரம்பரிய இசைக்கு நடனமாடிய தோடா் பழங்குடியின மக்கள். 
நீலகிரி

தோடா் பழங்குடியின மக்களின் பாரம்பரிய ஆடல், பாடலுடன் உதகையில் ஆருத்ரா தரிசன விழா

உதகை அருகே உள்ள பவானீஸ்வரா் கோயிலில் தோடா் பழங்குடியின மக்களால் ஆருத்ரா தரிசன விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Syndication

உதகை  அருகே உள்ள பவானீஸ்வரா் கோயிலில்  தோடா் பழங்குடியின மக்களால் ஆருத்ரா தரிசன விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டம், உதகை  அருகே பொ்ன்ஹில் பகுதி உள்ளது. இங்குள்ள பவானீஸ்வரா் கோயிலில்  114-ஆவது ஆண்டு ஆருத்ரா தரிசன விழா  வெகு விமரிசையாக சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. திருத்தேரை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வடம்பிடித்து தொடங்கிவைத்தாா். தோடா் பழங்குடியின மக்கள், தங்கள் பாரம்பரிய உடை அணிந்து நடனமாடினா்.

 உதகை  மத்தியப் பேருந்து நிலையப்  பகுதியில்  தொடங்கி, மெயின் பஜாா் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக திருத்தோ் ஊா்வலம் நடைபெற்றது. தோடா் பழங்குடியின  மக்கள் ஏராளமானோா்  கலந்துகொண்டு பாரம்பரிய இசை,  நடனமாடி சுவாமி தரிசனம் செய்தனா்.

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

SCROLL FOR NEXT